top of page

Vaadi Kannaara

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 1 min read

வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை

வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை


ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை

தேடிப் பிடித்து அவன் காலைப் பிடித்துவிட


வாடி தவித்தவரை வாழ்த்தி நிலை உயர்த்தி

வாழ்வின் பொருள் கூறி வந்த காரியம் உரைத்து

ஊடித்திரிந்தவரை கூடி மகிழ வைத்து

உற்சாகக் காற்றாக உயரே பறப்பவனை


கோடி மகான் அழைத்த பூலோக கைலாசமிவன்

யோகிராம் சூரத்குமார் கண்ட இறைவனிவன்

காஞ்சி மகான் கணித்த ஸ்ரீ மஹா ஜோதியிவன்

வாஞ்சை நம்மேல் வைத்து வையத்துதித்தவனை


பெற்றவர்க்குப் பெருமை சேர்த்த தனயன் இவன்

மற்ற சொந்தங்களெல்லாம் மறுத்துக் கிளம்பியவன்

கற்றதெல்லாம் முருகன் தந்த வரமென்பவன்

கருணை மிகவே கொண்ட அருணைத் தலைவனை


அஞ்சுதல் தவிர்த்த அரும்பெரும் தலைவனை

அகம் புறம் இரண்டும் ஒரு நிறமானவனை

வஞ்சகம் களைந்திட வலிய எழுபவனை

வானும் மண்ணும் போற்றும் தீனதயாபரனை



 
 
 

Recent Posts

See All
Vaa muruga padham

Audio: https://drive.google.com/file/d/1WfHp0C6oyv6Y14OvdXNr6uhwsA1RbA1V/view?usp=sharing Vaa muruga padham thaa muruga - vadi vael...

 
 
 
Vaanavarum Kaana Varum

வானவரும் காணவரும் சித்திரக் கூடம் ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம் நானிலத்தோர் கண்டு மகிழும்...

 
 
 
Vaalaal aruththu chudinum

Vaalaal aruththu chudinum maruththuvan paal maalaadha kaadhal kolgiraay - vidhi maala aruththu saayppaan - avanai kaanaamalae...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page