Unnaalthaane Baba
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
உன்னால்தானே பாபா இந்த உலகில் சந்தோஷம் - உன்
உரத்த குரலில்தானே இங்கே கலையுது பகல் வேஷம்
அன்பு விதையை விதைத்து விதைத்து அறுவடை செய்கின்றாய்
ஆனந்தத்தின் எல்லையிலே நீ நர்த்தனமாடுகிறாய்
சின்னஞ்சிறுவர் நெஞ்சுள் வரையும் சித்திரமாகின்றாய்
தன்னம்பிக்கை கொண்டு வாழ தளமாய் இருக்கின்றாய்
இளைஞர் நெஞ்சை இங்கிதப் பேச்சால் கவர்ந்து விடுகின்றாய் -அவர்
எங்கிருந்தாலும் உன் பெயர் சொல்ல கருத்தாய் வளர்க்கின்றாய்
கன்னியருக்கு திருமண பொறுப்பை வலிந்து எடுக்கின்றாய் - அவர்
கனவிலும் நினையா வாழ்வினை தந்து மகிழ்ச்சி கொள்கின்றாய்
முதியோர்களுக்கு பெற்ற மகனாய் சேவை செய்கின்றாய்
மோதும் பகைகள் ஏதானாலும் சாதகமாக்குகின்றாய்
கதி என்று வந்த பேர்களின் கண்ணீர் துடைக்கின்றாய்
காதலாகி கசியும் நெஞ்சுள் கோயில் கொள்கின்றாய்
சோலையில் பூக்கும் சுகந்த மலர்களில் நீதான் சிரிக்கின்றாய்
சொர்க்கம் என்பது இதுதானோ என திகைக்க வைக்கின்றாய்
Comments