Aanma Ezhudhiyadhu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
ஆன்மா எழுதியதிப் பாட்டு - நீ
அங்கீகரிப்பாயோ கேட்டு
வான்மாரி உன்னருள் வியந்து - வாரி
வழங்கும் பேரன்பைப் புகழ்ந்து
சூத்திரம் என்ன செய்தாயோ - உனைச்
சுற்றிச் சுற்றி வருகின்றேன் -ஒரு
மாத்திரைப்போதும் பிரியேன் எனும்
மன நிலை கொண்டலைகின்றேன்
[ஒரு] பாத்திரம் நான் ஆவேனோ
பதம் பற்றி உனில் கலப்பேனோ
சாத்திரம்நெறிமுறை அறியேன் - என்
சங்கரா உனைத்தானே அறிவேன்
கனவிலும் உன்முகம் தானே -என்
கருத்தில் பதித்து வைத்தேனே - என்
தனமென்பதும் நீ தானே - முன்
தவத்தால் உனையடந்தேனே
அன்புக்குப் பொருள் நீதானே -என்
ஆனந்தமும் நீதானே
உறவு நீ ஒருவன் தானே - என்
உயிரே உனைப் பிரியேனே
ความคิดเห็น