Nee Thappiththu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
நீ தப்பித்து ஓடி விட முடியாது - உனைத்
தவற விட்டால் என் இதயம் தாங்காது
தண்டை இசை குலுங்க வரும் பேரழகா - நின்
தாள்கள் என் உலகமடா வேல் முருகா
இதயக் குகையில் உன்னை பூட்டி வைத்தேன்
எண்ணங்களை உனிச்சுர்றிக் காவலிட்டேன்
கதி நீயே என்று நான் கதறுகிறேன் - என்
கண்ணீர் கண்டும் உன் மனம் கல்லாகுமோ - சங்கரா
எட்டாதுன் ப;தம் என்று எண்ணாதே
ஏது இவளுக்கருகதை எனச் சொல்லாதே - நெருப்பாய்ச்
சுட்டாலும் நான் உன்னைப் பிரிவேனோ - பழி
சுமந்தாலும் உன் அன்பை மறப்பேனோ
கண்ணுக்குள் வைத்திமையால் மூடிடுவேன் - நின்
கழலடியில் நிம்மதியாய் வாழ்ந்திடுவேன் - மனப்
புண்ணுக்கும் உனையன்றி மருந்தெவரோ - ஓ
பூவே எனக்கென்றுலகில் யார் எவரோ
Comments