top of page

Naan Unnaith Thaedi

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

நான் உன்னைத் தேடி வந்தேன்

நீ என்னைக் காட்டி விட்டாய் - உனை

விண்ணில் தேடி நின்றேன் - நீ

மண்ணில் நின்று அழைத்தாய்


கல்லில் தேடிப் பார்த்தேன் - ஒரு

சொல்லில் உணர்த்தி விட்டாய்

படத்தில் பூஜை செய்தேன் - உன்

னிடத்தில் நானே என்றாய்

நான் உன்னைத் தேடி வந்தேன்

நீ என்னைக் காட்டி விட்டாய்


கனவில் பார்க்க விழைந்தேன் - நீயோ

கனலுள் எழுந்து நின்றாய்

காற்றுள் அளைந்து பார்த்தேன் - என்

கருத்தை வருடி நின்றாய்

குறி கேட்க வந்தேன் - உன்னை

அறி என்று சொன்னாய் - என்

குறை தீர வந்தேன் - என்னை

சிறை செய்து விட்டாய்


அன்பைத் தேடி வந்தேன் - நற்

பண்பில் வாழ வைத்தாய் - என்

பசி தீர வந்தேன் - நீ

பதவி தந்து விட்டாய்

கதை பேசித் திரிந்தேன் - என்னைக்

கவிதை சொல்ல வைத்தாய்

விதியில் உழன்று வந்தேன் - நீ அதன்

வேரைக் களைந்து விட்டாய்


மலையில் தேடிப் போனேன் - ஏழு

மலையன் நானே என்றாய்

சிலைக்குள் கூர்ந்து பார்த்தேன் - அதிலே

சிரித்து எழுந்து வந்தாய்

கவலை சொல்ல வந்தேன் - இன்பக்

கடலில் தள்ளி விட்டாய்

புகலை நாடி வந்தேன் - நீ என்

மதலை என்று சொன்னாய்


நிறத்தில் பேதம் கண்டேன் - அதன்

தரத்தைப் பாரு என்றாய் - என்

சிரத்தை பாதம் வைத்தேன் - நீ என்

சிந்தை அமர்ந்து விட்டாய்

அமைதி தேடி வந்தேன்

ஆனந்தம் தந்து விட்டாய்

ஆராய்ச்சி செய்ய வந்தேன் - இன்ப

அதிர்ச்சி தந்து விட்டாய்.

 
 
 

Recent Posts

See All
Naadagam onru

Naadagam onru nadaththa vandhaay - adhil vedam ida emai therndheduththaay paadaganaa nee kural koduththaay - enai aada vaiththu angu nee...

 
 
 
Naadha vadivinale

Naadha vadivinale - Sivashankariye sanaadhaniye jagathkaaraniye modhaga priyan magizh mohanavalli saamagaana boshani subashini sathya...

 
 
 
Naan enru maraindhu

Naan enru maraindhu neeyaaguven - irai gnaaname naan undhan seyaaguven paalodu neer serndhaal paalaagume parane unnodinaindhaal param...

 
 
 

Comentários


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page