Shankaram Engira
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
சங்கரம் என்கிற நூலிழையில் தங்கியதென்னுள் உயிரோட்டம்
கங்கையாய்ப் பெருகும் அன்பினிலே கலந்தது கண்ணின் நீரோட்டம்
வாடிய நெஞ்சை வளமாக்கும் வள்ளலவன் அருள் தேரோட்டம்
தேடியலைந்தேன் பல நாளாய் இன்று தெளிந்தது என் மனப்போராட்டம்
நம் குலம் வாழ தனைத்தந்தான் நம்பியிவன்போல் யார் எவரே
தன் தொழில் இறைப்பணி என்பவனைத் தவம் செய்தடைந்தீர் மானிடரே
பைந்தமிழ் வளர்க்கும் பாவலனாய்ப் பாரினில் வந்தது அருட்பேறே
பொய்த்தடம் நடப்பார் இங்கடைந்தால் பொன் குணத்தாவார் அறிவீரே
வாழ்வு என்னும் மா கடலில் மீட்கவே வந்த படகோட்டி
வையகம் நிகழும் நாடகங்கள் வரைந்தான் இவன்தான் இசைமீட்டி
தாழ்வு வந்திடும் வேளையிலே தங்கக்கை கொடுத்தேற்றிடுவான்
தாள்களே சரணம் என்றிருந்தால் தாயாய்ப் பேணிக் காத்திடுவான்
Comentários